நல்லவேளை... தப்பி விட்டார் விஜயகாந்த்.. சொல்வது தமாகா யுவராஜா!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திமுக, காங்கிரஸ் இணைந்து அமைத்திருப்பது 2ஜி கூட்டணி. நல்லவேளையாக இதில் சிக்காமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தப்பிவிட்டார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
ஈரோடு அருகே நம்பியூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி 2ஜி ஊழல் கூட்டணி. விஜயகாந்த் இந்த ஊழல் கூட்டணி வலையில் சிக்காமல் தப்பித்து விட்டார் என்றார் யுவராஜா.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்த விவரங்களை கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் விரைவில் அறிவிப்பார் என்றும் யுவராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications