பிரச்சாரத்தில் தாசில்தாரை தாக்கிய வழக்கு: அழகிரி மேலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரைத் தாக்கிய வழக்குத் தொடர்பாக அடுத்தமாதம் 27ம் தேதி மு.க.அழகிரி நேரில் ஆஜராக மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மேலூர் அருகே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் மு.க.அழக்இரி. அப்போது கோவிலுக்குச் சென்ற அழகிரியை தாசில்தார் காளிமுத்து வீடியோ படமெடுத்துள்ளார்.

M.K.Azhagiri ordered to appear in Melur court

இது தொடர்பாக அழகிரி மற்றும் அவருடன் சென்ற தொண்டர்கள் காளிமுத்துவைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அப்பகுதி மக்கள் சிலரும் காயமடைந்தனர். இது தொடர்பாக அழகிரி உட்பட 21 பேர் மீது மேலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், வழக்கில் தொடர்புடைய 9 பேர் மட்டுமே ஆஜரானார்கள். அழகிரி உட்பட மீதமுள்ள 12 பேர் ஆஜராகவில்லை.

இதுதொடர்பான வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, அன்றைய தினம் அழகிரி உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+