முச்சத நாயகன் கருண் நாயருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயருக்கு திமுக பொருளாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனையை புரிந்துள்ள இந்திய வீரர் கருண் நாயருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ராகுலின் சதத்தாலும், கருண் நாயரின் இரட்டை சதத்தாலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் முச்சதம் விளாசினார். அவர் 381 பந்தில் 32 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் குவித்து கடைசி அவரை அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தநிலையில் முச்சதம் அடித்து சாதனை புரிந்த கருண்நாயருக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் அஸ்வினின் சிறந்த பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications