ஈரோடு மாநாடு வெற்றி மகிழ்ச்சி... கருணாநிதியை சந்தித்தார் ஸ்டாலின்!
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்த நிலையில் சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்தார்.
சென்னை : ஈரோட்டில் நடந்த திமுக மாநாடு தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னை திரும்பிய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.
ஈரோட்டில் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திமுக மண்டல மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமான மாநாட்டு பந்தல் தமிழக அரசியல் களத்தையே மாற்றிப் போடும் அளவிற்கு சிறப்பாக நடந்த இந்த மாநாட்டில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

திமுக மண்டல மாநாடு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சென்னை கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து மாநாடு சிறப்பாக வெற்றியடைந்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications