என்ன இருந்தாலும் மாணவர்களுடனான நிகழ்ச்சிகள் நெஞ்சை விட்டு அகலுவதில்லை- மு.க.ஸ்டாலின் பூரிப்பு
கோவை மாவட்டத்தில் அன்னூரில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டது நெஞ்சை விட்டு அகலாத ஒன்று என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்னூர்: கோவை மாவட்டத்தில் அன்னூரில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெஞ்சை விட்டு அகலாததாக இருப்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோவை அன்னூரில் தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு, கவிதை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.

நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், எத்தனையோ நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக, எழுச்சியாக கண்களை கவரக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எல்லா நிகழ்ச்சிகளை விடவும் என்றைக்கும் என் நெஞ்சத்தை விட்டு அகலாத நிகழ்ச்சி இருக்கிறது என்றால், அது இதுபோன்ற மாணவர்களை அழைத்து, அவர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள்தான். இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தான் உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 19 ஆயிரத்து 482 மாணவ, மாணவியருக்கு 7 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தி மொழி திணிக்கப்பட்ட நேரத்தில் அதனை எதிர்த்து பல தலைவர்கள் போராடினாலும் அதில் முழு வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். அண்மையில் கூட நம்முடைய இனத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை மீட்க மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய "மெரினா புரட்சி"யை இந்த நாடு என்றைக்கும் மறக்காது. அதுபோன்று தமிழகத்தின் சமூக - பொருளாதார முன்னேற்றத்துக்கும், மொழி - பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்கவும், மாணவர்களும் - இளைஞர்களும் என்றைக்கும் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications