சசிகலா கணவர் நடராஜனுக்கு ஹை பிபி.. அப்பல்லோவில் அனுமதி
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: நேற்று தான் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவரது கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள எல் வார்டில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.