For Daily Alerts
Just In
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வின் வேதா இல்லம் முடக்கமா? அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வின் வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவான வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்கி வருகிறது தமிழக அரசு. இதை எதிர்த்து முசிறியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்கக் கூடாது என தங்கவேலு தமது மனுவில் கூறியிருந்தார். இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.
பின்னர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வேதா இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
English summary
The Madras High court today issued notice to Tamil Nadu Govt in the case against Jayalalithaa' Veda Illam to become memorial.
Story first published: Tuesday, September 5, 2017, 12:36 [IST]