மது விற்பனை நேரத்தைக் குறைக்க பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரும் கோரிக்கைகளை பரீசிலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எல்.ராஜா மது விற்பனை மூலம் அரசுக்கு மாதம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்
இதனைக் கேட்ட நீதிபதிகள் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென்றும் அரசியல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
டாஸ்மாக் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசு தான் முடிவெடுத்து உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்
குடிப்பழக்கத்திலிருந்து விடுபட மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற யோசனைகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அதைப் பரீசிலிக்க அரசுக்கு உத்தரவிட முடியுமென்று கூறிய நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications