கோவில் பசுக்களை பிராணிகள் நலவாரியம் அடிக்கடி சோதிக்க வேண்டும் – சென்னை ஹைகோர்ட்
சென்னை: கோவில்களில் உள்ள பசு காப்பகங்களின் செயல்பாடுகளை பிராணிகள் நல வாரியம் அவ்வப்போது சோதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு பசுக்களை பக்தர்கள் தானமாக வழங்குகின்றனர். இந்த பசுக்களை காப்பகங்களில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

முறையான பராமரிப்பு இல்லாததால் அவை இறக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள கால்நடைகளை நன்கு பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், " கடந்த மாதம் 11 ஆம் தேதி அரசு அதிகாரிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும். அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறிய பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம்.
கோவில்களில் செயல்படும் பசு காப்பகங்களை சோதிக்கும் வகையில் அவ்வப்போது பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டர் களின் துணையை பிராணிகள் நல வாரியம் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை பெற்றுக் கொள்ளலாம்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரணை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன் பிராணிகள் நல வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications