கோவில் பசுக்களை பிராணிகள் நலவாரியம் அடிக்கடி சோதிக்க வேண்டும் – சென்னை ஹைகோர்ட்
சென்னை: கோவில்களில் உள்ள பசு காப்பகங்களின் செயல்பாடுகளை பிராணிகள் நல வாரியம் அவ்வப்போது சோதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு பசுக்களை பக்தர்கள் தானமாக வழங்குகின்றனர். இந்த பசுக்களை காப்பகங்களில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

முறையான பராமரிப்பு இல்லாததால் அவை இறக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள கால்நடைகளை நன்கு பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், " கடந்த மாதம் 11 ஆம் தேதி அரசு அதிகாரிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும். அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறிய பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம்.
கோவில்களில் செயல்படும் பசு காப்பகங்களை சோதிக்கும் வகையில் அவ்வப்போது பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டர் களின் துணையை பிராணிகள் நல வாரியம் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை பெற்றுக் கொள்ளலாம்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரணை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன் பிராணிகள் நல வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications