மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கும் பணி... மேலும் அவகாசம் வழங்கி சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அபாயகரமான மற்றொரு கட்டிடத்தை இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 20 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மழையின் போது கட்டுமான பணியின்போது 11 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பலியானார்கள் 27 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்தை இடிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிடத்தை இடிப்பதற்கு திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனும்தி ஜுலை 22 ம் தேதியுடன் காலவதி ஆகிவிட்டதால் புதுப்பிப்பதற்கு காவல் ஆணையரிடம் விண்ணபிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
தற்போது வரை 1,2,3,8,9 தளங்ககளில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றது. கட்டிடத்தின் எடையை குறைப்பதற்கு 5 வது தளத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடிக்கும் பணி இன்னும் 15 இருந்து 20 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிடத்தை இடிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பொதுநல வழக்குகளை தனித்தனியாக தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications