ஜெயேந்திரர் விட்டு சென்ற பணியை விஜயேந்திரர் தொடருவார் என நம்புகிறோம்.. மதுரை ஆதினம் இரங்கல்

ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக சங்கரமடத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Madurai Aadhinam condoles for Jayandrar dead

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயேந்திரரின் மறைவுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயேந்திரரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார். கன்னியாகுமரியில் மத பிரச்சனை எழுந்தபோது அதனை சரிசெய்தவர் ஜெயேந்திரர் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார்.

மேலும் ஜெயேந்திரர் விட்டு சென்ற பணிகளை இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாகவும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காஞ்சி ஜெயேந்திரரின் மறைவுக்கு குன்றக்குடி அடிகளார் மற்றும் திருப்பனந்தாள் ஆதினம் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+