ஜெயேந்திரர் விட்டு சென்ற பணியை விஜயேந்திரர் தொடருவார் என நம்புகிறோம்.. மதுரை ஆதினம் இரங்கல்
ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: ஜெயேந்திர் விட்டு சென்ற பணிகளை விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாக மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரர் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக சங்கரமடத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயேந்திரரின் மறைவுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார். கன்னியாகுமரியில் மத பிரச்சனை எழுந்தபோது அதனை சரிசெய்தவர் ஜெயேந்திரர் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார்.
மேலும் ஜெயேந்திரர் விட்டு சென்ற பணிகளை இளைய மடாதிபதியான விஜயேந்திரர் தொடருவார் என நம்புவதாகவும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காஞ்சி ஜெயேந்திரரின் மறைவுக்கு குன்றக்குடி அடிகளார் மற்றும் திருப்பனந்தாள் ஆதினம் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications