மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரம்: பன்வாரிலால் புரோகித்
Recommended Video

சென்னை: மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது,
மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முக்கிய மாநிலமாக உள்ளது. சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கண் மருத்துவமனை ஆகியவை ஆசியாவிலேயே பழமையான மருத்துவமனைகளில் அடக்கம்.
குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மருத்துவமனைகள் அமைப்பதில் தனியார் துறைகளின் பங்களிப்பு 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்ற பெருமை இந்த மாநிலத்திற்கு உள்ளது.
பொது சுகாதார சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழகம். உலகின் கிழக்கு பகுதியின் மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் விளங்குவதில் ஆச்சரியம் இல்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது தமிழக மக்களுக்கு ஒரு வரமாகும். இந்த மருத்துவமனை மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் 15 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications