போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்... மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை
அலங்காநல்லூர் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்திய வெளியேற்றிய காவல்துறையினர் அலங்காநல்லூர் பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்திய போலீசார் அவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடித்து வைத்தனர்.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர்த் தலைவர்கள் விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் நிரந்தர சட்டத்துக்கான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
போலீசார் 30 நிமிடம் கெடு விதித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து அலங்காநல்லூர் முழுவதும் அணிவகுப்பு நடத்தி அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
தெருமுனைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளார். மேலும் மற்றப்பகுதிகளில் இருந்தும் போலீசார் அலங்காநல்லூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications