”பெற்றோர் இல்லாமல் பதிவுத் திருமணம் கூடாது” – மதுரை ஹைகோர்ட் விளக்கம் கேட்டு உத்தரவு
மதுரை: தமிழ்நாட்டில் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் கோயில்களில் மணமக்களின் பெற்றோரும் இருந்தால் மட்டுமே திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு உள்துறை செயலாளர், டிஜிபி, பதிவுத்துறை ஐஜி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

தமிழகத்தில் சமீபத்தில் கவுரவக் கொலைகள், காதல் திருமணங்கள் செய்து கொள்பவர்களின் பெற்றோர் தற்கொலைகள் , சாதிய வன்முறைகள் காதலர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமண சட்டபடி பெண்ணின் திருமண வயது 18 ஆகவம் ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் இந்த வயது கல்விக்கு பக்குவப்பட்ட வயதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்ள இந்த வயது ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வோர் விரைவில் விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க பதிவாளர் அலுவலகம் காவல் நிலையம் மற்றும் கோயில்களில் திருமணம் செய்யும் போது மணமக்களின் பெற்றோர்களின் அனுமதி பெற்றே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இம்மனுவிற்கு பதில் கோரி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications