”பெற்றோர் இல்லாமல் பதிவுத் திருமணம் கூடாது” – மதுரை ஹைகோர்ட் விளக்கம் கேட்டு உத்தரவு
மதுரை: தமிழ்நாட்டில் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் கோயில்களில் மணமக்களின் பெற்றோரும் இருந்தால் மட்டுமே திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட கோரிய வழக்கில் பதில் அளிக்குமாறு உள்துறை செயலாளர், டிஜிபி, பதிவுத்துறை ஐஜி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

தமிழகத்தில் சமீபத்தில் கவுரவக் கொலைகள், காதல் திருமணங்கள் செய்து கொள்பவர்களின் பெற்றோர் தற்கொலைகள் , சாதிய வன்முறைகள் காதலர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமண சட்டபடி பெண்ணின் திருமண வயது 18 ஆகவம் ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் இந்த வயது கல்விக்கு பக்குவப்பட்ட வயதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்துகொள்ள இந்த வயது ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வோர் விரைவில் விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க பதிவாளர் அலுவலகம் காவல் நிலையம் மற்றும் கோயில்களில் திருமணம் செய்யும் போது மணமக்களின் பெற்றோர்களின் அனுமதி பெற்றே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இம்மனுவிற்கு பதில் கோரி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications