பயணிகள் வசதிக்காக...மதுரை விமான நிலையத்தில் ‘மல்லிகைப் பூ’ விற்பனை
மதுரை: நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பறந்த விமானங்களில் பயணிகளோடு, மதுரையின் வாசமும் சேர்த்து பயணம் செய்தது. என்னப் புரியவில்லையா...? மதுரை விமான நிலையத்தில் புதிதாகத் துவக்கப் பட்டுள்ள மல்லிகைப் பூ விற்பனை நிலையத்திலிருந்து பயணிகள் மணக்கும் மல்லிகை வாங்கிச் சென்றனர் என்பதைத் தான் அப்படிக் கூறினோம்.
மதுரை என்றாலே மணக்கும் ‘மல்லி' தான் முதலில் நினைவில் வரும். மதுரை மல்லி அதிகளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப் பட்டு வருகிறது. எனவே, மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சியான மல்லிகை மலரை தங்கள் ஊர்களுக்கு வாங்கிச் செல்லும் வகையில் மதுரை விமான நிலையத்தில் மல்லிகை விற்பனை நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மதுரை விமான நிலைய டெர்மினல் கட்டிடத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையத்தை துவங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது...

மல்லிகையின் மணம்....
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைபோல மல்லிகை பூவும் உலக பிரசித்தி பெற்றதாகும்.

விற்பனை நிலையம்....
இதனை மதுரைக்கு வரும் வெளிநாட்டினரும் வாங்கி செல்லும் வகையில் இங்கு விற்பனை நிலையம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பட்டாசு....
சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்களிடம் பட்டாசை உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன்.

உலக சந்தை....
அதேபோல மதுரை மல்லிகைப்பூ மற்றும் பழ வகைகளை உலக சந்தைக்கு கொண்டு செல்ல தொழில் வர்த்த சங்கத்தினர் முயற்சி எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

ரூ 100க்கு விற்பனை...
ஒன்றரை மீட்டர் மல்லிச் சரம் அழகிய வண்ண அட்டைப் பெட்டியில் வைக்கப் பட்டு ரூ 100க்கு விற்பனைச் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications