கோர்ட் தடையை மீறி ஒட்டக குர்பானி.. நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது வழக்கு
மதுரை: உயர்நீதிமன்ற தடையை மீறி ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்ததாக நடிகர் வடிவேலுவின் உதவியாளரான ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 30 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
பக்ரீத் பண்டிகையன்று ஒட்டகம் குர்பானி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை போட்டு விட்டது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்தவரும், நடிகர் வடிவேலுவின் உதவியாளுமான ஆதம் பாவா என்பவர் ஒட்டகம் ஒன்றை வாங்கி குர்பானி கொடுப்பதற்காக மதுரை நெல்பேட்டையில் உள்ள சுங்கம் பள்ளிவாசலில் வைத்திருந்தார்.

ஆனால் கோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டிய போலீஸார், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் தடையை மீறி வெட்டப் போவதாக ஆதம் பாவா கூறியிருந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவருடன் ஆலோசனை நடத்தினர். அவரை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து வேன் மூலம் ஒட்டகத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஆனால் போலீஸாரை ஏமாற்றி விட்டு நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு அருகே வைத்து ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் தற்போது ஆதம் பாவாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேர் மீது நாகமமலைப் புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து 30 பேரும் தலைமறைவாகி விட்டனராம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications