இன்னும் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.. மாஃபா அதிரடி பேட்டி

அம்மாவின் மேல் நம்பிக்கை வைத்து நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து அந்த தீர்மானத்தை தோற்கடியுங்கள் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்எல்ஏக்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியது: கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் இன்று காலை கூவத்தூரிலிருந்து தப்பித்து கோவைக்கு தப்பியோடி சென்றுவிட்டார்.

Mafa Pandiyarajan says many AIADMK MLAs are in touch with O.Pannerselvam

இதேபோல, அரசுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் மேல் நம்பிக்கை வைத்து நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து அந்த தீர்மானத்தை தோற்கடியுங்கள். இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் கட்சி இருக்க வேண்டுமானால் எதிர்த்து வாக்களிப்பது அவசியம். அனைத்து எம்.எல்.ஏக்களும் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடியும். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+