For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் தாக்குதலால் தீக்குளித்து இறந்த டிரைவர்.. மாஜிஸ்திரேட் விசாரணை

சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடித்ததை தொடர்ந்து தீக்குளித்த இளைஞைர் உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: சீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடித்ததை தொடர்ந்து தீக்குளித்த இளைஞைர் உயிரிழந்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

நெல்லையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் சென்னை தாம்பரத்தில் உள்ள வாடகைக்கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி சென்னை ஓஎம்ஆர் சாலையில் போலீசார் அவரை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

Magistrate is investigating the case of Manikandan's death

இதில் மனமுடைந்த மணிகண்டன் அங்கேயே தீக்குளித்தார். அவரைக் காப்பாற்றிய பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் மரணம் குறித்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.

மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

English summary
Magistrate is investigating the case of Manikandan's death. The Egmore court magistrate has investigated the relatives of Manikandan. Magistrate Gopinath was interrogated at the government hospital in Kilpauk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X