Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடநாடு கொலை: விபத்தில் சிக்கிய சாயனிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம்!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயன் மீது டேங்கர் லாரி மோதியதை தொடர்ந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயனிடாம் கோவை மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

Magistrate regsitered statement from Sayan

கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டுள்ளனர். எஸ்டேட் நோக்கி வந்த வாகனங்கள் சோதனை சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதவியாகியிருந்தது. அதன் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் போயஸ் கார்டன் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 6 பேர் சிக்கினர். ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் நேற்று இரவு சாலை விபத்து ஒன்றில் பலியானார் என்று போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு கேரள நபரான சாயனை போலீஸார் தேடி வரும் நிலையில் அவரும் விபத்தில் சிக்கினார். இதில் சாயனின் மனைவியும், குழந்தையும் பலியாகினர். படுகாயம் அடைந்த சாயன், ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சாயன் என்பதாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் கோவை மருத்துவமனைக்கு நேரில் வந்த மாஜிஸ்திரேட் அவரிடம் வாக்குமூலம் பெற்றார். கொடநாடு கொலை, குறித்து வாக்குமூலமாக சாயன் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+