ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி நல்லா நடக்குது... அதிகாரிகள் சரியில்லை- மதுரை ஆதினம்
தமிழகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சி நன்றாகவே நடக்கிறது என்றும் அதிகாரிகள்தான் சரியில்லை என்றும் மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
மதுரை: தீ விபத்துக்கும் ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் நன்றாகவே நடக்கிறது. மோடி ஆட்சியும் நன்றாகவே நடக்கிறது என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு தீவிபத்து நடைபெற்றது. அங்குள்ள 30 கடைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்த நிலையில் மதுரை ஆதினம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் அங்குள்ள கடைகள்தான். அரசு நன்றாகவே இருக்கிறது. மோடி அரசு நன்றாகவே நடக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அரசும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அதிகாரிகள்தான் சரியில்லை. வியாபார நோக்கில் கடைகள் வைக்க அனுமதி கொடுத்துள்ளனர்.
சைவ சமயம், வைணவ சமயம் என்றுதான் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையினால் எந்த பயனும் இல்லை. கோவிலில் எந்த விழா நடந்தாலும் சன்னிதானத்திற்கு தெரிவிப்பதில்லை. ஆதினம் என்றாலோ, மடம் என்றாலோ, மடாதிபதிகள் என்ன என்பதோ தெரியாது. எனவே எதுவுமே தெரியாமல் உள்ள அதிகாரிகள் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். இந்து கோவில்களை அறநிலையத்துறை வசமிருந்து மீட்க வேண்டும் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.