97% சதவீதம் பேர் சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு.. போயஸ் கார்டனை அலறவைத்த ஆன்லைன் சர்வே முடிவு
சட்டப் பஞ்சாயத்து இயக்கம் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலா முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 97 சதவீதம் பேர் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியுள்ளார். அடுத்ததாக முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்ய சசிகலா முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை சர்வே நடத்தப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர் சர்வேயில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது 94 சதவிகிதம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 97 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. இவ்வாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications