காவிரியில் துரோகம்: சென்னையில் பாஜக அலுவலகத்தை இழுத்து மூட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை இழுத்து மூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆளும் பாஜக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடும் என்ற நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் நடத்திய அமைப்பினரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications