சொத்து விபரங்களை வெளியிட நாங்க ரெடி, நீங்க ரெடியா?: வைகோவுக்கு சந்திரகுமார் சவால்
சென்னை: சொத்து விபரங்களை வெளியிட நாங்கள் தயார், வைகோ தயாரா என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையில் சென்னை தி. நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் போட்டி பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வைகோ
கைவோவை நம்பி விஜயகாந்த் எப்படி செல்லலாம்?. பழிவாங்கும் எண்ணம் கொண்ட வைகோவை விஜயகாந்த் நம்பலாமா? எங்கள் குடும்ப பிரச்சனையில் வைகோ எப்படி
தலையிடலாம்? தேர்தலில் தமது இயக்கத்தை போட்டியிட வைக்காதவர் வைகோ.
வைகோவின் சொத்து
வைகோவின் மருமகன் ஒரு பெரிய நிறுவனத்தில் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளார். வைகோவின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக் கணக்கை காண்பிக்க சொல்லுங்க. நாங்கள் எங்களின் சொத்து விபரங்களை வெளியிடுகிறோம். இது போன்ற சவாலுக்கு எல்லாம் வைகோ வர மாட்டார்.
பணம்
நாங்கள் பிற கட்சிகளிடம் பணம் வாங்கியதாகக் கூறுகிறார்கள். நாங்கள் எந்த கட்சியிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதை நிரூபிக்க அவர்கள் தயாரா? யாரிடமும் பணம் வாங்கவில்லை என வைகோ, விஜயகாந்த், பிரேமலதா சத்தியம் செய்ய தயாரா?
அதிமுக-திமுக
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. யாரையும் நேரில் சந்திக்காத விஜயகாந்த் கட்சியினரிடம் போனில் பேசியுள்ளார்.விஜயகாந்த் உருக்கமாக பேசியதால் பலர் எங்கள் அணிக்கு வர தயக்கம் காட்டுகிறார்கள்.
தேமுதிக
தேமுதிக அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தேமுதிகவில் பல எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் இணைய உள்ளனர். ரூ.86 கோடியில் நிலம்
ஒன்று இந்த ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது யாருடையது என்பதை தெரிவிக்க மாட்டேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். என்னை நம்பி வரும் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள்.