குப்பைகளை அகற்ற கிளவுஸ், தட்டுகளுடன் வீதியில் களமிறங்கிய வைகோ, திருமா, முத்தரசன்!
சென்னை: வெள்ளத்தில் சிக்கி கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ள சென்னை நகரையும், மக்களையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எராளமானோர் ஈடுபட்டுள்ளனர். துப்புரவு பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மட்டுமல்லாது தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மக்கீஸ் கார்டனில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பெய்த மழை வெள்ளத்தால் ஏரிகள் நிரம்பி, திறந்து விடப்பட்ட உபரி நீர் கூவம், அடையாறுகளில் பெருகிறது. இதனால் ஆற்றின் கரையார மக்களை அதிகம் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகள் மூழ்கின. சென்னையே குப்பை நகரமாகிவிட்டது.

இந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள், நடிகர், நடிகையர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் அவரவர் பகுதிகளை சுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இந்த நிலையில் நிவாரண பணிகளுக்குப் பின்னர் இன்று 12.12.2015 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் பகுதியில் குப்பைகளை அகற்றினார்கள். தொடர்ந்து அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications