போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக் கூட்டணியின்... "பிரியாணி விருந்து"!

Subscribe to Oneindia Tamil

நெல்லை:திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக்கூட்டணி சார்பாக, நெல்லை மாநகர மதிமுக செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் பிரியாணி வழங்கினார்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10-ந்தேதி தொடங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Makkal nala kootani supplies biriyani to government employees

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இரவு பகலாக அங்கேயே தங்கி, சமையல் செய்து அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு மக்கள் நலக்கூட்டணி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனைப்படி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் 3000 பேருக்கு பிரியாணி வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+