தப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல்
விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி சந்திப்பின் மூலம் பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி சந்திப்பின் மூலம் பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். மோசடி செய்ததோடு லண்டனுக்கும் பறந்து எஸ்கேப் ஆனார்.

அவரை இன்னும் இந்தியா கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது!
— M.K.Stalin (@mkstalin) September 13, 2018
பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!
அதில், வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது!
பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!, என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications