கோவை அருகே 8 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்ற காமக் கொடூர தந்தை
கோவை: கோவையில் 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 31 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அருகே வசிப்பவர் சதீஷ் குமார்(31). கூலித் தொழிலாளி. அவரது மனைவி மதிய வேளையில் வெளியே சென்றுள்ளார். அப்போது சதீஷும் அவரது 1ம் வகுப்பு படிக்கும் 8 வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மனைவி சென்றதும் சதீஷ் குமார் தன்னுடன் இருந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார். அப்போது வீட்டுக்கு திரும்பி வந்த சதீஷின் மனைவி நடந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் மகளை அழைத்துக் கொண்டு நேராக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அவர் சதீஷ் குமார் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications