திருவண்ணாமலை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை- கொலையாளி கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் திருமணத்தில் பங்கேற்க சிறுமி வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே வானாபுரத்தை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு பாலாஜி, ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், 15 வயது நிரம்பிய அஸ்வினி என்ற மகளும் உள்ளனர்.

மகன்கள், மகளுடன் முருகாயி பெங்களூருவில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். வேணுகோபாலுக்கு லேசாக கண் தெரியாது. அவர் மட்டும் மழுவம் பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வருகிற 9ம் தேதி பாலாஜிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக முருகாயி பெங்களூருவில் இருந்து மகன்கள், மகள் அஸ்வினியுடன் மழுவம் பட்டுக்கு வந்தார்.
பந்தக்கால் நடுவதற்காக கம்பு எடுத்து வர வேணுகோபால், முருகாயி, அஸ்வினி ஆகிய 3 பேரும் அங்குள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர். வேணுகோபாலும் முருகாயியும் கம்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அங்கிருந்து அஸ்வினியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அஸ்வினி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பண்டாரிநாதன்,36 என்பவர் அஸ்வினியை வழி மறித்து நிறுத்தினார்.
பின்னர் அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச் சென்றார். அங்கு அஸ்வினியை பலாத்காரம் செய்துள்ளார்.
அஸ்வினி தப்பிக்க முயன்று சத்தம் போடவே, பண்டாரி நாதன் பயந்து போய் அஸ்வினியின் வாயை மூடியதோடு கழுத்தை நெரித்தார். இதில் அஸ்வினி பரிதாபமாக இறந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், முருகாயியும் அங்கு ஓடி வந்தனர். அங்கு அஸ்வினி உயிரிழந்தார்.
சிறுமியை காணவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் தேடிய போது, சடலமாக சிறுமி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பக்கமாக வந்த பண்டரிநாதன் மீது சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவரை அடித்து கேட்ட போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பண்டரிநாதனை கைது செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications