கோபுரக் கலசங்கள் திருடுவதே “ஹாபி”- மதுரையில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் கோபுரக் கலசங்களைத் திருடும் பழக்கத்தை உடைய பெரியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்புவனத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்கின்ற வயதானவர். இவருடையே பழக்கமே கோபுரக் கலசங்கள் கண்ணில் பட்டால் உடனே திருடி பதுக்கி வைப்பதுதான்.

அப்படி, மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோபுர கலசங்கள் திருடி வந்த லெட்சுமணனை ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து பல்வேறு கோவில் கலசங்கள் பறிமுதல் செய்யபட்டன. கலசங்கள் எதையும் விற்காத அவர் வீட்டிலேயே சேகரித்து வைத்துள்ளார். கோபுரக் கலசங்களைத் திருடிய காரணத்தினால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications