2 குழந்தைகளின் தாயை மணப்பெண்ணாக நடிக்க வைத்து லாரி உரி்மையாளரை ஏமாற்றிய புரோக்கர் கைது
சேலம்: சேலத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை மணப்பெண்ணாக காட்டி ஒருவரை ஏமாற்றிய புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக திருமணத்திற்கு மணப்பெண் பார்த்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் இளங்கோவன், சுரேஷ்குமாருக்கு குமணன்குட்டையில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணை மணப்பெண்ணாக காட்டியுள்ளார். சுரேஷ்குமாருக்கு லட்சுமியை பிடித்ததால் புரோக்கர் இளங்கோவனுக்கு 40 ஆயிரம் கமிஷனாக கொடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்த சுரேஷ்குமார் 27 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக பத்திரிக்கை அடித்து கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரத்தில் திடீரென சுரேஷ்குமாரை தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன் மணப்பெண் லட்சுமியை ஏற்கனவே பார்த்து சென்ற வேறு ஒரு மாப்பிள்ளையிடம் 60 ஆயிரம் அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும், இப்போது அந்த மாப்பிள்ளை நீங்கள் பார்த்து சென்ற மணப்பெண் லட்சுமியை கடத்திச் செல்வதாக மிரட்டுவதாகவும். 60 ஆயிரம் கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது எனக் கூறியுள்ளார். லட்சுமியை திருமணம் செய்து கொள்ளவதற்காக மீண்டும் 60 ஆயிரம் கொடுத்துள்ளார் சுரேஷ்குமார்.
இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மணமகன் சுரேஷ்குமாரை மீண்டும் தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன், மணப்பெண் லட்சுமிக்கு உங்களை பிடிக்கவில்லையாம் இதனால் லட்சுமி சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஆகவே திருமணத்தை ஒருவாரம் தள்ளிப்போட வேண்டும் எனவும் அதற்குள் லட்சுமியை சமாதானப்படுத்தி வைக்கிறேன் எனவும் புரோக்கர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த சுரேஷ்குமார் நண்பர்களோடு ஈரோடு வந்து மணப்பெண் வீட்டில் பார்த்துள்ளார். வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் விசாரித்ததில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி கோயம்புத்தூர் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. பின் கோயம்புத்தூர் சென்று தேடியுள்ளனர்.
ஒருவழியாக புரோக்கர் இளங்கோவனை பிடித்து விசாரிக்கையில் மணப்பெண் லட்சுமியாக நடித்தது சரிதா என்ற பெண் என்றும், ஏற்கனவே திருமணமாகி சரிதாவுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை பிரிந்து வாழும் சரிதா புரோக்கர் இளங்கோவனுடன் சேர்ந்து கொண்டு மணப்பெண் போல நடித்து திருமணம் ஆகாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புரோக்கர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications