ஏலச்சீட்டு நடத்தி 20 லட்ச ரூபாய் மோசடி – போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூபாய் 20 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து ராஜலட்சுமி என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ஏராளமான வாடிக்கையாளர்கள் அவரிடம் சீட்டுப் பணம் செலுத்தி வந்தனர்.

இந்தநிலையில் முருகேசன் தன்னுடைய குடும்பத்தினருடன் சீட்டு கட்டியவர்களிடம் பணம் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், போலீஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தப்பட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர் போலீசார்.












Click it and Unblock the Notifications