2வது மனைவியாக 10ம் வகுப்பு மாணவி- தட்டிகேட்ட மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் பத்தாம் வகுப்பு மாணவியை 2 ஆம் திருமணம் செய்த விவகாரத்தில் தட்டிக் கேட்டதற்காக முதல் மனைவியின் தாயார் அரிவாளால் வெட்டப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாஸ்கரன் . இவருக்கும், சேந்தமங்கலத்தை சேர்ந்த அன்னபூரணி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கரன் மரூர்பட்டி வழியாக லாரி வேலைக்கு சென்று வந்த போது அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த மாணவியை சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதையறிந்த அன்னபூரணி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்னபூரணியின் தாயார் பானுமதி, பாஸ்கரனிடம் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து கேட்டிருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பானுமதியை அரிவாளால் வெட்டியிருக்கிறார் பாஸ்கரன். இதில் காயம் அடைந்த பானுமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+