குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் – தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு உயிர்விட்ட மகன்!

Subscribe to Oneindia Tamil

பாகூர்: நாகர்கோவிலில் தன்னுடைய தாய் குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் வாலிபர் தீக்குளித்து இறந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் எடலாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கனகம். இவர் கணவரை விட்டு பிரிந்து தனது மகன் பெருமாள் என்பவருடன் புதுவை காக்காயந்தோப்பில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையை அவ்வப்போது பெருமாளும் கவனித்து வந்தார்.

இதற்கிடையே குடிபழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட பெருமாள் மளிகை கடையில் விற்பனையாகும் பணத்தை எடுத்து மதுகுடித்து செலவழித்து வந்ததால் பெருமாளை கனகம் மளிகை கடையில் சேர்ப்பதில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் முதுகுடிக்க தனது தாய் கணகத்திடம் பணம் கேட்டார். அப்போது அவருக்கு கனகம் ரூபாய் 50 கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய பெருமாள் மீண்டும் மது குடிக்க கனகத்திடம் பணம் கேட்டார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த பெருமாள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பெருமாள் அலறினார்.

உடனே மகனின் அலறல் சத்தம் கேட்டு கனகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து பெருமாளை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+