பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு - இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஏற்காட்டில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மகிழம்பட்டியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஊர்ப்பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சிவக்குமார், சண்முகம் ஆகியோரிடையே பிரச்சனை இருந்துள்ளது.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பெரும் பிரச்சினையானது. இந்த வாய்த்தகராறு பிறகு கைகலப்பாக மாறியுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் சிவக்குமார் தனது துப்பாக்கியால் சுட்டதில் சண்முகம் படுகாயமடைந்தார். இதையடுத்து சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய சிவகுமார் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications