"கபாலியின் தோல்வி" என்பதற்காக வைரமுத்துவை கட்டி வைத்து அடிப்பீர்களா? மனுஷ்யபுத்திரன் பாய்ச்சல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கபாலி படம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொன்னதற்காக கவிஞர் வைரமுத்துவை கட்டி வைத்து அடிப்பீர்களா? என்று எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் சாடியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் "கபாலி படம் தோல்வி" அடைந்துவிட்டதாக கூறியிருந்தார். வைரமுத்துவின் விமர்சன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதேநேரத்தில் கபாலி படத்தில் பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால்தான் இப்படி வைரமுத்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என படத் தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார். அத்துடன் தம்மிடம் இருந்து 4,000 கபாலி பட டிக்கெட்டுகளையும் வைரமுத்து 'ஓசியில்" வாங்கிச் சென்றதாக கூறியிருந்தார் தாணு.

மனுஷ்யபுத்திரன் ஆதரவு
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக்கில் கடுமையான சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளதாவது:

கட்டி வெச்சு அடிப்பீங்களோ?
கடவுளையே எதிர்த்த ஒரு மாநிலத்தில் கபாலியை எதிர்க்க முடியாது போலிருக்கிறது. 'கபாலியின் தோல்வி' என்று வைரமுத்து ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக அவரை இவ்வளவு தூரம் கட்டி வைத்து அடிப்பீர்களா?

சாதிவெறியனா?
உடனே அவர் சாதிவெறியன் ஆகிவிடுவாரா? தினமணி வெளிப்படுத்தியது மிகப்பச்சையான சாதிய அரசியல். அதை எதிர்ப்பதை புரிந்துகொள்ள் முடிகிறது.

தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு
ஆனால் வைரமுத்து அத்தகைய தொனியிலா பேசினார்? விஸ்வரூபம் என்ற படம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் மூலம் தமிழர்ககள் அனைவரும் அந்தப் படத்தை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

நியாயமே இல்லையே
இப்போது கபாலி இவ்வளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் அதே போன்ற காரணம் இருக்கலாம். வைரமுத்து மீதான இந்தத்தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை. கபாலி ஒரு மசாலா படம். அதை மதம் ஆககாதீர்கள்.
மனுஷ் கருத்தை திமுக ஏற்கிறதோ?












Click it and Unblock the Notifications