அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி ஒளித்து வைக்கப்பட்டுள்ளனர்.. தினகரன் பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி அணிக்கு எதிராக மோதல் முற்றிய நிலையில் மேலூரில் இன்று முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டிடிவி தினகரன். இதனால் அரசுக்கு எதிராக என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தொற்றியது. அவர் பேசுகையில் கூறியதாவது:

இரண்டு, மூன்று சட்டசபை உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர். நமது ஆட்சியில் நமது நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டியவர்களை அலேக்காக தூக்கிச் சென்று சென்னையில் ஒழித்து வைக்கப்பட்டுள்ளனர். ஒழித்து வைக்கப்பட்டுள்ளவர்களால் நீங்கள் ஒழிக்கப்படுவீர்கள். மேலும் பல எம்எல்ஏக்கள் இங்கு வர விரும்பினர். ஆனால் தொகுதிக்கு நலத் திட்ட உதவி கிடைக்காதோ என்றோ வேறு நெருக்கடிகளாலோ அவர்களால் வர முடியவில்லை. ஆனாால் அவர்கள் எல்லோருடைய மனதும் மேலூரில்தான் இருக்கும்.

Many of our faction MLAs are kidnaped by Edapadi team: TTV Dinakaran

என்னோடு இருக்கும் எம்.எல்.ஏக்களும் ஜெ. ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைப்பவர்கள். மடியில் கனமிருப்பதால் ஆட்சி கலையும் என நீங்கள் அச்சப்படலாம். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராகவும், என்னை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் இப்போது அது செல்லாது என்கிறார்கள். இது செக்ஷன் 420 படி தவறு என நான் கூறியிருந்தேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+