உண்மையை நான் கூறினால் பலர் அவமானப்பட வேண்டி இருக்கும்... மிரட்டும் எம்எல்ஏ!
உண்மையை நான் கூறினால் பலர் அவமானப்பட வேண்டியிருக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை: உண்மையை நான் கூறினால் பலர் அவமானப்பட வேண்டியிருக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். ஒரு அளவுக்கு மேல் என்னால் பொறுமை காத்து அனைத்தையும் மறைக்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.
தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் எல்எல்ஏ வெற்றிவேல். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் வெற்றிவேல்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு தினகரனின் ஆதரவாளராக உள்ள வெற்றிவேல் ஒவ்வொரு முறையும் தினகரனை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இன்றும் வெற்றிவேல் எம்எல்ஏ தினகரனை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
நடுரோட்டில் போய் நின்றிருக்கும்
அப்போது சசிகலா கூவத்தூர் செல்லவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இருந்திருக்காது என்றார். கட்சியும் நடுரோட்டில் போய் நின்றிருக்கும் என்றும் வெற்றிவேல் கூறினார்.
எங்களிடம் ஆதரவு உள்ளது
தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் பிரதமர் ஆதரவு கேட்டது உண்மை தான் என்றும் அவர் கூறினார். மோடி சசிகலாவிடம் ஆதரவு கேட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சசி கட்டுப்பாட்டில் தான்
கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
அவமானப்பட வேண்டியிருக்கும்
உண்மையை நான் கூறினால் பலர் அவமானப்பட வேண்டியிருக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். ஒரு அளவுக்கு மேல் என்னால் பொறுமை காத்து அனைத்தையும் மறைக்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.