For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா ஜன.17–ம் தேதி ஆரம்பம்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி நடைபெறுகிறது.

பக்தர்களால் 7-வது படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Maruthamalai Thaipoosam festival begins on 17th Jan

விழாவின் ஒவ்வொரு நாளும் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 24-ம் தேதி அன்று காலை 9 மணிக்கு தைப்பூச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 11.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

தேரில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை சமேத ராய் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 8-ம் திருநாளான 25-ம் தேதி மாலை 5 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு மகா தரிசனமும், மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிக்குமார், இணை ஆணையர் இளம்பரிதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

English summary
Maruthamalai Subramaniya Swamy Thai Poosam Festival begins 17th January
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X