மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா ஜன.17–ம் தேதி ஆரம்பம்
கோவை: கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி நடைபெறுகிறது.
பக்தர்களால் 7-வது படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 24-ம் தேதி அன்று காலை 9 மணிக்கு தைப்பூச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 11.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
தேரில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை சமேத ராய் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 8-ம் திருநாளான 25-ம் தேதி மாலை 5 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு மகா தரிசனமும், மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிக்குமார், இணை ஆணையர் இளம்பரிதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.