திருச்செந்தூரில் நாளை மாசி திருவிழா தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக பக்தர்கள் அங்கு குவிய தொடங்கியுள்ளனர்.

மாசி திருவிழா நாளை துவங்குவதை ஓட்டி இன்று மாலை திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 12ம் திருவிழா மண்டபத்தில் தாண்டவ விநாயகர் கோயில முன்பு கொடி பட்டத்தி்ற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடரந்து கொடி பட்டம் யானை மீது ஏற்றப்பட்டு உள் மற்றும் வெளி மாட வீதிகள், 4 ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் வந்தடைகிறது

Masi festival begins tomorrow in Thiruchendhur temple

கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு அபிஷேகம், 2.30மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. 5ம் திருவிழாவான 27ம் தேதி இரவு சிவன்கோவிலில் குடவாயிலில் தீபாரானையாகி குமரவிடங்க பெருமாள் சாமியும், தெய்வானை அம்பாளும் தனிதனியாக தங்கள் வாகனங்களில் எழுந்தருளுகின்றனர்.

28ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். மார்ச் 1ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருக்கோயிலில் சண்முக பெருமான் உருகு சட்ட சேவையும், காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுக நயாகர் சண்முகவிலாசத்திலிருந்து வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை அடைகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதகளிலிருந்து பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+