மதுரை வங்கியில் ரூ.10.60 லட்சம் கொள்ளை: மர்ம நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள்!

Subscribe to Oneindia Tamil

Masked man robs Madurai bank, walks away with Rs.10.60 lakh
மதுரை: மதுரை வங்கியில் பட்டப்பகலில் ரூ10.60 லட்சம் பணத்தை கொள்ளையடித்த முகமூடி நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மகாத்மா காந்தி நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் மாடியில் கார்ப்பரேசன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று மாலை ஊழியர்கள் 6 பேர் பணியில் இருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர், வங்கி காசாளர் பானுமதி அருகே சென்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் மிரண்டனர். உடனே அங்கிருந்த அனைவரையும் அந்த முகமூடி இளைஞர் வங்கி மேலாளர் அறைக்கு செல்லுங்கள் இல்லாவிட்டால் பெண் ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று கூறினான்.

இதையடுத்து அனைத்து ஊழியர்களும் மேலாளர் அறைக்குள் சென்றனர். அறைக்குள் வைத்து அவர்களை பூட்டிய அந்த ஆசாமி பானுமதியை கத்தி முனையில் அழைத்து சென்று அங்கிருந்த ரூ.10.60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டான்.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடந்தபோது வங்கியில் இருந்த அலாரத்தை அடிக்காதது ஏன்? அங்கிருந்த காவலாளி அப்போது எங்கு சென்றார்? ஒரு சிறிய கத்திக்கு 6 பேரும் பயந்து பதுங்கியது ஏன்? ஆகிய சந்தேகத்தின் பேரில் ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மர்ம நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+