விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேச்சு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக வெற்றி பெற்று விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கூறிய வைகோ, இன்னும் ஓரிரு நாளில் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாக கூறினார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளில், மதிமுக சார்பில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வழங்கப்பட்டன.

மீதமுள்ள 2 தொகுதிகள் மதிமுகவுடன் இணைந்த "தமிழர் முன்னேற்றப் படை', "தமிழ் புலிகள் இயக்கம்' ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
வேட்பாளர் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர்- தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு வரை 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர் நேர்காணலை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையிலான குழு நடத்தி முடித்தது.

இந்த நிலையில்,இன்று தனது மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது பேசிய வைகோ, சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக வெற்றி பெறும் என்று கூறினார். விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறிய வைகோ, மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு கூட்டத்தில் அனுமதியில்லை என்று கூறினார். தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு ரூ. 2000 வரை அதிமுகவினர் கொடுப்பதாக வைகோ குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறிய வைகோ தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications