மதிமுக பொதுக்குழு கூட்டம்: வானகரத்தில் நாளை கூடுகிறது
சென்னை: ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.
மதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீ வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் வரை வழி நெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு மதிமுக பொதுக் குழு கூடுகிறது. மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்குழுவுக்கு வரும் வைகோவுக்கு வானகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பொதுக்குழுவிற்கு ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் மேற்பார்வையிட்டு வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.












Click it and Unblock the Notifications