வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரிப்பு!
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முகநூல் (Facebook) மற்றும் பல்வேறு இணையப் பக்கங்களில் வைகோவுக்கு ஆதரவாக இயங்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் படித்த இணைஞர்களான ‘மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள்' விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டையில், இன்று (12ஆம் தேதி) வைகோவை ஆதரித்து பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, மூன்று மூன்று பேராக வரிசையில் நின்று அருப்புக்கோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாகப் பேரணியாக வந்து பம்பரம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பேராசிரியர் பாத்திமா பாபு, உள்ளிட்ட பலர் பேரணியை தொடங்கி வைத்தனர்.