வைகோ – ரஜினி ரகசிய சந்திப்பு… பரபரப்புத் தகவல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ம் தேதி நடந்த இந்த சந்திப்பு குறித்த தகவலை ம.தி.மு.க நேற்று வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஞாயிறு மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக படத்தை வெளியிட்டுள்ளது.

பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்...
ஏப்ரல் 6ம் தேதி பகல் 12.30 மணிக்கு ரஜினிகாந்த்தின் இல்லம் சென்ற வைகோவை ரஜினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது என்றும், அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை வைகோ, ரஜினிகாந்த்திடம் கொடுத்தார்.

ரகசியம் ஏன்?
ரஜினியை வைகோ சந்தித்துப் பேசியதை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்று மதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, மோடி- ரஜினி சந்திப்பு நடைபெறும் வரை அதை வெளியிட வேண்டாம் என தலைமை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

ராம்ஜெத்மலானிதான்...
ரஜினியுடன் மோடி, வைகோ சந்திப்புகளுக்கு முக்கியக் காரணம் ராம்ஜெத்மலானிதான் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications