ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அதிரடி அறிவிப்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக சார்பில் வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்று கூடியது.

கூட்டாட்சி தத்துவம்
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சுயாட்சியை நிராகரித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைக்கிறது பாஜக.

மொழி, இன பண்பாட்டு உரிமைகள்
தமிழக ஆற்று நீர் உரிமைகள் பறிபோகின்றன. தமிழக முக்கிய பிரச்சனைகளில் மத்திய அரசை தமிழக அரசு தட்டிகேட்கவில்லை. தமிழகத்தின் மொழி, இன பண்பாட்டு உரிமைகள் கேள்விக்குறியாகிவிட்டன.

ஆட்சி அதிகாரத்தை...
கூட்டாட் தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசுசெயல்படுகிறது. அதிமுக அரசை இயக்கும் பாஜக ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

திமுகவுக்குத்தான் மதிமுக ஆதரவு
திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கு உண்டு. எனவே இந்த இடைத்தேர்தலில் மதிமுகவின் ஆதரவை திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு அளிக்கிறோம்.

சட்டபேரவையில் தீர்மானம்
நல்லிணக்கமான சூழல் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இதை தொடக்க புள்ளியாக கருதலாம். இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications