மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன்?... சுகாதார துறை செயலாளர் விளக்கம்
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்கு பிறகுதான் அறிவிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வானது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகள் நடத்தப்பட்டு இளநிலை மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகிவிடும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது இதுவரை அது மத்திய அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்படவே இல்லை.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 88,000 பேர் கலந்து கொண்டனர். பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலகத்தில் தெரிவிக்கையில், நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம் ஜனாதிபதியின் பரிந்துரையில் உள்ளது.
எனவே அதுகுறித்து முடிவு தெரிந்தவுடன் மருத்துவ விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து தெரியும். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்றார் அவர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications