மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன்?... சுகாதார துறை செயலாளர் விளக்கம்
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்கு பிறகுதான் அறிவிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வானது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகள் நடத்தப்பட்டு இளநிலை மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகிவிடும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது இதுவரை அது மத்திய அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்படவே இல்லை.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 88,000 பேர் கலந்து கொண்டனர். பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலகத்தில் தெரிவிக்கையில், நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம் ஜனாதிபதியின் பரிந்துரையில் உள்ளது.
எனவே அதுகுறித்து முடிவு தெரிந்தவுடன் மருத்துவ விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து தெரியும். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்றார் அவர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications