மருத்துவ உதவி, நிவாரணப் பொருட்கள் தேவையா?: இதை படிங்க
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் உதவி வேண்டி நிற்பவர்களின் வசதிக்காக அது குறித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஏராளமான உதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு உதவி செய்பவர்கள் உதவி வேண்டி காத்திருப்போரின் வசதிக்காக அது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.
அப்படி உதவி செய்வோர் வெளியிடும் ட்வீட்டுகளில் சில இதோ..
|
மருத்துவர்கள்
கோவிந்தசாமி நகர் ஆர்.ஏ. புரத்திற்கு மருத்துவர்கள் குழுவை அனுப்புகிறோம். அந்த பகுதி தன்னார்வலர்கள் மருத்துவர்கள் குழுவோடு இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். குழு மதியம் 2 மணிக்கு வரும்.
|
மருத்துவ முகாம்கள்
அரசு மருத்துவ முகாம்களை நடத்துகிறது. இந்த தகவலை பரப்புங்கள். நோய்களை கட்டுப்படுத்த இது முக்கியம்.
|
மருத்துவமனை
டைடல் பார்க் அருகே உள்ள விஹெச்எஸ் மருத்துவமனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓ.பி. மற்றும் ஐ.பி. சிகிச்சையை இலவசமாக அளிக்கிறது. தொடர்புக்கு டாக்டர் கோகுலன் 90033-00634. முகாம்களும் நடத்தப்படுகிறது.
|
நிவாரணப் பொருட்கள்
அசோக் லேலாண்ட் நிவாரணப் பணி உதவி டெஸ்கில் நிவாரணப் பொருட்கள் உள்ளது. தொடர்புககு 22206266. இடம், கிண்டி, அண்ணா சாலையில் உள்ள அவர்களின் கார்பரேட் அலுவலகம்.
|
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
#OxygenCylinders கேட்பவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். சென்னையில் எந்த பகுதியாக இருந்தாலும் சரி. தொடர்புக்கு கார்த்திக் 9380222497 அல்லது 9789006018
|
உணவு
போலாரிஸ் குழுமத்தின் ஜெயின் நிவாரண மையங்களில் சென்னையில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு வழங்க உணவு, போர்வைகள், மருந்து, தண்ணீர் உள்ளது. தொடர்புக்கு பாலமுருகன் 9840748477/8807012365












Click it and Unblock the Notifications