தஞ்சையில் கரிகாலன் நினைவு மண்டபம்: சென்னையில் இருந்து திறந்து வைத்த ஜெ
சென்னை: தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கரிகாலன் நினைவு மண்டபத்தை, நேற்று சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சிகள் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (12ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மத்திய கருவிமய மைய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 27 கோடியே 88 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்து, 573 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனின் பெருமைகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றி கௌரவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மன்னர் கரிகால் சோழன் நினைவு மணிமண்டபத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருச்சி மாநகராட்சியில், 221 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தையும் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். மேலும், 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்; சென்னை மாநகராட்சி பகுதியில் 56 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், சுரங்கப் பாதை மற்றும் கலை அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து, 28 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களைத் துவக்கி, 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊத்துக்குளி வருவாய் வட்டத்தை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இலுப்பூர் வருவாய் கோட்டம் மற்றும் சென்னை, வேலூர், கரூர், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 22 வருவாய் வட்டங்களையும் தொடங்கி வைத்தார்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications