மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூலை வரை தொடரும்-அதிகாரிகள்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை மே முதல் வாரத்தில் மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள்.
தற்போது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கோயம்பேடு - அசோக் நகர் இடையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தை மேலும் விரிவுப்படுத்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மே முதல்வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே மாதம் முதல் வாரத்தில் அசோக் நகர் - ஆலந்தூர் இடையே இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.
அப்போது மெட்ரோ ரயிலின் அதிகப்பட்ச வேகம் சோதனை செய்யப்படும். பின்பு இந்தச் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் வரை நடைபெறும்.
மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் உள்ள ரயில் நிலையப் பணிகள் முடிவடைந்த பின்பு அக்டோபர் மாதம் பயணிகள் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications