வெள்ளத்தில் மூழ்கிய வாழைகள்.. சரிந்த விலை.. கவலையில் விவசாயிகள்
வாழை விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக கடும் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை: பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஏராளமான வாழைகள் நீரில் மூழ்கி விவசாயிகளை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த ஆண்டு பருவமழை சீக்கிரமாகவே தொடங்கியது. இதனால் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தமிழக அணைகளும் பெரும்பாலும் நிறைந்துள்ளன. மேலும் பவானி ஆற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்திருந்த வாழைகள் நீரில் மூழ்கின. இதனால் மேட்டுப்பாளைய பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதனால் காரமடை நால்ரோடு பிரிவில் இயங்கவிரும் மேட்டுப்பாளையம் மார்க்கட்டுக்கு அதிக அளவில் வரும் வாழைத்தார்களும் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட் பரபரப்பின்றியும் கூட்டமின்றியும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இருக்கும் வாழைத்தார்களுக்கும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
வரத்து குறைந்தால் பொதுவாக விலை உயரும் நிலை போய், தற்போது வரத்தும் குறைந்து விலையும் குறைந்துள்ளது. ஏற்கனவே தண்ணீரில் வாழைகளை பறிகொடுத்த விவசாயிகள், வாழை விலையும் குறைவாக விற்க நேரிடுவதால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications